
நாளை (மார்ச் 31) நாடுமுழுவதும் அனைத்து பகுதிகளிலும் 10 மணி நேரம் சுழற்சிமுறை மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
அதன்படி, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுழற்சிமுறையில் 10 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகளிலும் துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரம், இன்று நள்ளிரவிற்கு பின்னரும் தொடர்வதற்கான சாத்தியம் உள்ளதாக மின்சார சபை தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று 10 மணிநேர மின் தடை ஏற்படுத்தப்படும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மணிநேரத்தை தாண்டிய மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் பி முதல் டபிள்யூ வரையான வலயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.