
நாட்டு மக்கள் தற்போது பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் அரிசிக்கும் வரிசையில் நிற்க வேண்டிய காலமும் வரலாம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்படும் மின் வெட்டின் நேர அளவு ஆரம்பகாலத்திலிருந்தே அதிகரித்து செல்வதாகவே இருந்து வருகின்றது.
இந்த மின் வெட்டானது நாட்டினது ஒட்டுமொத்த பொருளாதார சரிவையும் உருவாக்குகின்றது.
குறிப்பாக இந்த மின்வெட்டினால் உள்ளுர் உற்பத்தியாளர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்துப்பிரிவினரும் பாதிக்கப்படுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் வைத்தியசாலைகளில் கூட அவசரசிகிச்சை பிரிவுகளில் பல பாதிப்புக்கள் இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு மிக ஆபத்தான சூழ்நிலைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது. இந்த விடையங்களில் அரசாங்கம் சரியான முறையான ஒரு தீர்வினை நாட்டுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாளுக்குநாள் மக்கள் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் மக்கள் அரிசி மற்றும் மரக்கரிகளுக்காக வரிசையில் நிற்கவேண்டிய சூழல் உருவாகலாம் என்றார்.