வவுனியா பாடசாலைக்கு அருகே கொட்டப்படும் குப்பைகளினால் துர்நாற்றம்!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் கற்குழி ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களாக வீட்டுக் குப்பைகள் அகற்றப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகின்றது.

இதனை நீண்ட நாட்களாக அகற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளை தரம் பிரித்து பைகளில் கட்டிவைக்குமாறு நகரசபை ஊழியர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதனை அப்பகுதி மக்கள் பின்பற்றவில்லை. தரம் பிரித்து வழங்கும் குப்பைகளை எடுக்குமாறு நகரசபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

கற்குழி நகரசபை உறுப்பினரிடம் இது தொடர்பாக கேட்டபோது, சபைக்கு இது குறித்து முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நகரசபை ஊழியர்கள் பற்றாக்குறை, கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளினால் நகரில் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்க முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *