எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சேவையிலிருந்து விலக தயார்! பாடசாலை போக்குவரத்து இறுதி எச்சரிக்கை

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் சேவைகளை வழங்குவதிலிருந்து விலக தயாரென அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது .

மேலும், எந்தவொரு ஆதரவும் கிடைக்காவிட்டாலும், பரீட்சை மற்றும் கல்விசார் விடயங்களைக் கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் என்.எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் (1) சாதகமான தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் மேலும் எச்சரித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *