அக்கரைப்பற்று மீனவர்களின் வலையில் சிக்கிய ஆணின் சடலம்

அம்பாறை – அக்கரைப்பற்று கடலில் மீனவர்களின் வலையில் ஆண் ஒருவரின் சடலம் சிக்கியுள்ளது.

கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் வலையில் நேற்று (29) பகல் சடலம் சிக்கியதாக பொலிஸார் கூறினர்.

சுமார் 45 தொடக்கம் 55 வயதிற்கு இடைப்பட்ட ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *