வரிசையில் காத்திருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி! மனோ கணேசனின் முகநூல் பதிவு

நாட்டில் எரிபொருள், எரிவாயு என்பவற்றிற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்து உயிரிழந்த பரிதாபகரமான சம்பவங்களும் இலங்கையில் பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் எரிபொருள் பெற சென்ற சம்பவம் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவில்,

வரிசையில் காத்திருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி..! ஆனால் இயந்திரம் சுற்றும்போது, தலையும் சுற்றுது, ப்ரதர்..! பற்றாததுக்கு பணியாள் “கெரகெனவாத சார்” என கிண்டலாக, தன் இயந்திரத்தையா, என் தலையையா என மயக்கமாக கேட்கிறார் என அவர் பதிவிட்டுள்ளமை வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *