காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு !

காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு !

நூருள் ஹுதா உமர். 

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 2022 ஆம் ஆண்டுக்கான பயிற்சி கருத்தரங்கும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.                 
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய, மாவட்ட  மற்றும் பிரதேச ரீதியில் இலக்கினை அடைந்து கொண்ட உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வை தொடர்ந்து அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியினால் கருத்தரங்கும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன்,  பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி, விடய பொறுப்பு அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் ,  சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *