
சென்னை, மார்ச் 30
தமிழ் நாட்டின் முதல்வர் ஸ்டாலின் இந்தியப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா உள்ளிட்டோரை வியாழக்கிழமை சந்திக்க டெல்லி புறப்பட்டார்
முதல்வர் ஸ்டாலின், கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
டெல்லியில் திராவிட கோட்டை தலைநிமிரும். டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன்.
தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, வர வேண்டிய வருவாய் வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மாநில நிவாரணத்திற்காக அவர்களை சந்திக்க உள்ளேன். தேசிய தலைவர்களையும் சந்திக்க உள்ளேன். அமீரக பயணம் வெற்றியடைந்த நிலையில், அடுத்த பயணம் தலைநகரை நோக்கி அமைகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.