நாளை 13 மணி நேர மின்வெட்டு: அதிர்ச்சியில் மக்கள்

கொழும்பு, மார்ச் 30

வியாழக்கிழமை 13 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மாதம் 5 ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளைய தினம் ABCDEF ஆகிய பிரிவுகளில்,
காலை 3 மணி முதல் 6 மணி வரை
மதியம் 12 மணி முதல் 4 மணி வரை
மாலை 6 மணி முதல் 12 மணி வரை

GHIJKL ஆகிய பிரிவுகளில்,
காலை 12 மணி முதல் 3 மணி வரை
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

PQRS ஆகிய பிரிவுகளில்,
காலை 3 மணி முதல் 6 மணி வரை
மதியம் 12 மணி முதல் 4 மணி வரை
மாலை 6 மணி முதல் 12 மணி வரை

TUVW ஆகிய பிரிவுகளில்,
காலை 12 மணி முதல் 3 மணி வரை
காலை 8 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

MNOXYZ ஆகிய பிரிவுகளில்,
காலை 5.30 முதல் 9 AM வரை
மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *