
கொழும்பு, மார்ச் 31
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வரும் நிலையில் எரிபொருளை தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருளை தாங்கிய 4 ஆவது கப்பல் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.