
இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய தமிழக மீனவர்கள் மூவர் இன்று காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஜெகதாப்பட்டினம் பகுதி படகு, காரைநகர் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பகல் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.