
ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பிறகு பொது இடங்களுக்குச் செல்வதற்கு முழுமையாக கோவிட் தடுப்பூசி செலுத்திய அட்டையை கட்டாயமாக்க உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொது இடங்கள் குறித்த வரையறைகள் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.