மாவிட்டபுரத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியில் நேற்றைய தினம் பகல்வேளை வீட்டார் வெளியில் சென்றசமயம், வீட்டில் புகுந்த திருடர் 7 பவுண் நகையை களவாடிச் சென்றுள்ளனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர் பணிக்காக அலுவலகம் சென்றதோடு ஏனையோரும் பணி நிமித்தம் வீட்டில் இருந்து வெளிச் சென்றுள்ளனர்.

இவற்றை அவதானித்த திருடர்கள் வீட்டிற்குள உட்புகுந்து வீட்டில் இருந்த 7 பவுண் நகை மற்றும் ஒரு தொகைப்பணம் என்பவற்றை களவாடிச் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *