
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பாலத்தடிப்பகுதியில் நேற்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்தார் .
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி மோடடார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பலத்துடன் மோதியமையால் தலையில் படுகாயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டுவில் மத்திய பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ஈஸ்வரன் (50 வயது) என்ற வர்த்தகரே இவ்வாறு விபத்த்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.