வவுனியாவில் தேவாலயம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா, மார்ச் 31

வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31) அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  சடலம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்றும் காணப்படுவதுடன் இந்த நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *