தந்தை செல்வாவின் வழியில் பயணிப்பது நாம் மட்டுமே! – வீ.ஆனந்தசங்கரி

தந்தை செல்வாவின் வழியில் பயணிப்பது தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டுமே என மூத்த அரசியல்வாதி வீ .ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் பிறந்ததின, அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா ஒரு சிறந்த, நேர்மையான, திறமையான அரசியவாதி. அவரின் பெயரை காப்பாற்றக் கூடிய வகையில் இருப்பது தமிழர் விடுதலைக்கு கூட்டணி ஒன்று தான். அவரின் கொள்கைகளை கடுமையா கடைபிடிப்பது நாம் தான். அவர் உதய சூரியன் சின்னத்தை 25 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வந்தார்.

ஒரு சிலர் அவரையும் தள்ளி வைத்து விட்டு, அவரின் கொள்கையையும் கடைபிடிக்காமல் திரிகின்றனர். வீட்டுச் சின்னம் தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்டது அல்லது சு.ப தமிழ்ச் செல்வனால் உருவாக்கப்பட்டது. ஆனால் உதய சூரியன் தொடர்பில் முழு அக்கறையோடு செயற்பட வேண்டிய நபர் சேனாதிராஜா. ஆனால் அவர் வீட்டுச் சின்னத்தை வாங்கி விட்டார்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *