
இன்றைய தினம் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிக வெப்ப நிலைமை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே மக்கள் தேவையான அளவில் நீரை பருகவும், முடியுமான வரை நிழல் உள்ள இடங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வீட்டில் உள்ள வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லவேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதிகளவில் களைப்படையும் செயற்பாடுகளை குறைத்துக்கொள்வதுடன், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.