கடந்த 29 நாட்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 192 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2020 இற்கு பிறகு ஒரே மாதத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 80 ஆயிரத்து 26 எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *