இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் கிடப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதன்போது கைக்குண்டு, சிறியரக எறிகணைகள், ஆர்.பி.ஜி குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவற்றை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வெடிபொருட்கள் போரின் போது கைவிடப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *