குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

கொழும்பு, மார்ச் 31

அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசேட தரத்திலுள்ள குடும்ப நல சுகாதார வைத்திய அதிகாரிகளின் பதவிகளை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *