
மக்கள் விடுதலை முன்னணி பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அந்தவகையில் நாட்டில் தற்போது பல்வேறு தரப்பினராலும் முன்னெடுக்கப்படும் அங்கிகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுள்ளது.
நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பில் தமது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்த முயற்சிப்பதாகவும் எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஏக நேரத்தில் போராட்டத்தை நடத்துமாறு சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.