
டெல்லி, மார்ச் 31
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க இந்திய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமர் நரேந்திர மோடி- மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போதே தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.