மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 6 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை வழங்க இணக்கம்!

<!–

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 6 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை வழங்க இணக்கம்! – Athavan News

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 6 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை இன்று (வியாழக்கிழமை) வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.

மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *