
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 13 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த காலப்பகுதி அதிகரிக்கடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று 15 மணித்தியாளங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தபடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் டீசல் மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின் தடைக்காலம் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஊடாக மாத்திரமே மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.