
கொழும்பு, மார்ச் 31
6000 மெட்ரிக் தொன் டீசலை மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்க லங்கா IOC இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
டீசல் பற்றாக்குறை காரணமாக செயலிழக்க ஆரம்பித்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது செயற்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது.
ஏனைய அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான அன்ரூ நவமணி தெரிவித்தார்.
இது தொடர்பில் அன்ரூ நவமணி கூறியதாவது,
கெனியன் நீர் மின்னுற்பத்தி நிலையத்தில் ஒரு மின்பிறப்பாக்கி மாத்திரம் இன்று முதல் செயற்படுத்தப்படுகின்றது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 810 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இன்று இணைக்கப்படவுள்ளது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால், பல தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.