
செட்டிகுளம், வீரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கில் , சடலத்தை தகனம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற போது, மரம் ஒன்றில் இருந்து கலைந்து வந்த குளவிகள் அங்கு வந்தவர்கள் மீது கொட்டியதில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து குளவிகள் அங்கிருந்து சென்ற பின்னரே சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.