
கொழும்பு, மார்ச் 31
கொவிட் 19 தொற்று மேலும் 178 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 661,631ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 7,918 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது