
மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
இதேவேளை குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினரும் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.