எரிபொருள் இன்மையால் கோபமடைந்த மக்கள் கேகொட பிரதான வீதியை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுப்பு

நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அங்கிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாமையினால் கொதிப்படைந்த மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், வீதி மூடப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையை அவதானிக்க முடிந்துள்ளது.

தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருந்திரளானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் நுகேகொடவிலுள்ளவர்களும் மிரிஹான பகுதிக்கு செல்லப்போவதாக தெரிவித்த வண்ணமுள்ளனர்.

மிரிஹான – நுகேகொட – ஜனாதிபதி இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *