பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அலுவலக பணியாளர்கள் மற்றும் அமைச்சின் அலுவலர்களுக்கு விசேட பணிப்புரையொன்றை விடுத்துள்ளார்.
அதற்கமைய, அலுவலக பணியார்கள் மற்றும் அமைச்சின் அலுவலர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எரிபொருளை சிக்கனப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
