கொழும்பில் பதற்றம் : ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது தாக்குதல்

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல்

கொழும்பு மிரிஹான பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தி வருவதுடன் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பொலிஸாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியியில் அரசாங்கம் தொடர்பாக பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் கொழும்பின் பல பகுதிகளை சேர்நத மக்கள் பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோ சார் பிளிஸ் சார் என்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தயது செய்து சென்று விடுங்கள் சேர் என்பது இதன் அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *