இலங்கையில் ஆட்சி செய்த பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு எதிராக வரலாற்றில் என்றுமே நடந்திராத வகையில் நாட்டின் இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது வீட்டுக்கு எதிரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மக்களின் இந்த அரசியல் எழுச்சி புதிய திருப்புமுனையாக கருதப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் மக்கள் ஜனாதிபதியோ அல்லது பிரதமரின் வீடுகளுக்கு எதிரில் நேற்றைய தினத்தில் போல் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதில்லை.
அந்தளவுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் உட்பட அத்தியவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு மக்களை பாதித்துள்ளதை இது காட்டுகின்றது.