பதவியை துறந்து இராஜினாமா கடிதத்தை கையளித்தார் கப்ரால்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று (13) காலை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கப்ரால் கையளித்தார்.

இந்நிலையில் அஜித் நிவர்ட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *