சிறுவர்களுக்கே பைஸர் தடுப்பூசி மருத்­து­வர்­கள் மீண்­டும் கோரிக்கை!

சிறுவர்களுக்கே பைஸர் தடுப்பூசி மருத்­து­வர்­கள் மீண்­டும் கோரிக்கை!

உல­க­ளா­விய ரீதி­யில் சிறு­வர்­க­ளுக்கு ஏற்­றப்­பட வேண்­டிய ஒரே சிறந்த தடுப்­பூசி பைஸர் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அதைச் சிறு­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்­துச் செலுத்த வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் மீண்­டும் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.
இது தொடர்­பில் அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கத்­தின் மருத்­து­வர் பிர­சாத் கொலம்­பகே தெரி­வித்­துள்­ள­தா­வது-

தற்­போது சிறு­வர்­கள் தொற்­றுக்­குள்­ளா­கும் நிலை அதி­க­ரித்­துள்­ளது. இறப்பு வீத­மும் அதி­க­ரித்­துள்­ளது. எனவே அவர்­க­ளுக்­குத் தடுப்­பூசி செலுத்த வேண்­டி­யது அவ­சி­யம். அவர்­க­ளுக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்ட தடுப்­பூசி, பல பிர­தே­சங்­க­ளி­லும் பல்­வேறு வயது மட்­டங்­க­ளின் கீழ், அர­சி­யல்­வா­தி­க­ளின் தேவை­க­ளுக்கு அமைய செலுத்­தப்­ப­டு­கின்­றது.
விசேட மருத்­து­வர் குழு­வின் கோரிக்­கைக்கு அப்­பால் இவ்­வாறு தடுப்­பூசி செலுத்­தப்­ப­டு­கின்­றது. இத­னால் ஏற்­ப­டும் முரண்­பா­டு­க­ளால் விசேட மருத்­து­வர் குழு­வி­லி­ருந்து மருத்­து­வர்­க­ளும் வில­கு­கின்­ற­னர். இந்த முரண்­பாடு எதிர்­கா­லத்­தில் ஏற்­பட இட­ம­ளிக்க வேண்­டாம்.

பைஸர் தடுப்­பூ­சியை சிறு­வர்­க­ளுக்கு ஏற்றுவதற்கு ந­ட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளோம்.
எதிர்­வ­ரும் வாரங்­க­ளில் இலங்­கைக்­குக் கிடைக்­க­வுள்ள 4 மில்­லி­யன் பைஸர் தடுப்­பூ­சி­களை சிறு­வர்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.
ஆசி­ரி­யர்­க­ளது கோரிக்கை போலவே சிறு­வர்­க­ளுக்­கா­ க­வும் குரல்­கொ­டுத்து, தடுப்­பூ­சி­யைச் செலுத்­தும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்து பாட­சா­லை­க­ளைத் திறக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

ஏனைய வய­துப்பிரி­வி­ன­ருக்கு ஏனைய தடுப்­பூ­சி­கள் உள்­ளன. கிடைக்­க­வுள்ள பைஸர் தடுப்­பூசியை சிறு­வர்­க­ளுக்கு ஒதுக்­க­வும். இல்­லை­யேல் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் அண்­மை­யில் சந்­திக்­கும் துர­திஷ்ட சம்­ப­வங்­கள் போல், சிறு­வர்­கள் தொடர்­பி­லும் சந்­திக்க நேரி­டும்.- என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *