மக்கள் போராட்டம் தீவிரவாதிகளின் சதி என்று முடிவு செய்யக்கூடாது!பேராயர் கர்தினல்

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக நபர்களை மாற்றுவதை விட அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயர் பதவிகளை வகிக்கும் நபர்களை மாற்றுவது ஒரு தீர்வாகாது, ஏனெனில் இது பயனற்றது என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று கர்தினல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அனைத்து அதிகாரங்களும் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ள முறை நீக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களின் சட்டப்பூர்வ விதிவிலக்கு மாற்றப்பட வேண்டும்.

அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

பல்வேறு துறைகளில் நிபுணர்களின் ஆலோசனையுடன் அரச நிறுவனங்கள் சீர்திருத்தப்பட வேண்டும்.

நம் நாட்டு மக்கள். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற முடியாமல் இன்று வரிசையில் நிற்கின்றனர்.

கத்தோலிக்க திருச்சபை துன்பப்படுபவர்களுக்கு துணை நிற்கிறது. தற்போதைய இக்கட்டான காலத்திலும் பொது சொத்துக்களை விற்பது இரகசியமாக நடைபெறுகிறது.

ஒரு சில அரசியல்வாதிகளின் கூட்டாளிகள் சுயநலமாக சம்பாதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இந்நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் செயற்பட வேண்டும்.

மக்கள் போராட்டம் தீவிரவாதிகளின் சதி என்று முடிவு செய்யக்கூடாது.

இத்தகைய நடவடிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *