வடகொரிய ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை

வாஷிங்டன், ஏப் 02

வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வட கொரிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நான்கு துணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி, வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை ஆதரிப்பதற்காக ஐந்து நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக அமெரிக்க கருவூலம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *