ரொஷான் ரணசிங்க பதவி விலகியுள்ளார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளை மே 1 ஆம் திகதி முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த பெரும் போகத்தில் விசாயிகள் சேதன உரங்களை பயன்படுத்தியதால் அவர் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியுள்ளார்.

சேதன உரம் தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு கற்பித்தல், சேதன உரத்தின் தரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உரத்தின் விலையை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளையம் அவர் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *