
எமது திறமையற்ற அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர்களால் பொருளாதார மந்தநிலையில் இருக்கும் தனது நாட்டின் நிலையை கண்டு துயரமடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொசான் மகநாம தெரிவித்துள்ளார்.
அவர் இதனை தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தனது பதிவில்,
எமது திறமையற்ற அதிகார வெறிபிடித்த ஆட்சியாளர்களால் பொருளாதார மந்தநிலையில் இருக்கும் எனது நாட்டின் நிலையை கண்டு துயரம் அடைந்துள்ளதால் கனத்த இதயத்துடன் இந்த பதிவை எழுதுகின்றேன்.
நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். இந்த தலைவர்கள் எனப்படுபவர்களை விட அதிகளவு தேசப்பற்றுள்ளவன் என்பதை நான் தெரிவிக்கவேண்டும்.
சந்தர்ப்பம் கிடைத்தபோதிலும் நான் எனது நாட்டை விட்டு வெளியேறவில்லை.
இந்த தருணத்தில் உங்கள் அனைவரையும் இனமொழி மத அரசியல் கட்சி – நம்பிக்கைகள் என அனைத்து வேறுபாடுகளையும் மறந்துவிட்டு ஒன்றுபடுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
எங்கள் குரல்களை உயர்த்தி போதும் போதும் என தெரிவிப்போம் என தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.