தொடரும் மின்வெட்டு – பாடசாலை விடுமுறை குறித்து விசேட கோரிக்கை!

இலங்கையில் நீண்ட நேர மின்வெட்டு அமுல்படுத்தும் நிலை தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் முதலாம் தவணை விடுமுறை குறித்து விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறையை வழங்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்க்கொள்வதால் இவ்வாறு முதலாம் தவணை விடுமுறையயை அறிவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *