
சட்டவிரோதமாக சிகரெட் கடத்திய ஐந்து சந்தேக நபர்கள் நேற்று பேலியகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30, 34, 35, 46 மற்றும் 48 வயதானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரால் பேலியகொடை – மீன் சந்தைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 3,990,000 சிகரெட்டுகள் மற்றும் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்ட இரண்டு லொறிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட ஐவரும் நேற்றைய தினம் புதுக்கடை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.