போராட்டத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சரத் வீரகேசர

கொழும்பு, ஏப் 02

போராட்டத்தின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் . சரத் வீரகேசர கூறியதாவது,

3ஆம் திகதி போராட்டத்திற்காக அனைத்து மக்களும் வீதிக்கு இறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவது, பேரணியில் ஈடுபடுவது, அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது மக்களின் உரிமையாகும். அந்த உரிமை பறிக்கப்படவில்லை. பறிக்கப்படவும் மாட்டாது.

3ஆம் திகதி வீதிக்கு இறங்குபவர்கள், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஆனால், நாட்டின் சொத்துக்கள், அரச மற்றும் தனியார் சொத்துக்கள், வர்த்தக நிலையங்கள் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சித்தால்,பொலிஸார் கடுமையான நடவடிக்கைக்கு எடுக்கும்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரையில் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மிரிஹானவில் 39 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், காணொளி காட்சிகள் மூலம் இந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *