மிரிஹானவில் கைதானவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை!

<!–

மிரிஹானவில் கைதானவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை! – Athavan News

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆணைக்குழு கூடவுள்ளது.

அரசாங்கத்தினாலோ அல்லது வேறு தரப்பினராலோ குறித்த சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் முன்வைக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் தொடர்பில் அன்றைய தினம் கவனம் செலுத்தப்படவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *