ரமழான் தலைப் பிறை காட்சி: ஞாயிறு நோன்பு ஆரம்பம்

கொழும்பு, ஏப் 2

புனித ரமழான் மாதத்திற்கான ரமழான் தலைப் பிறை இலங்கையில் சனிக்கிழமை மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு கூடி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை பிறை தென்பட்டமைக்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து நோன்பு ஆரம்பமாகும் என பிறைக்குழு தீர்மானித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *