
ஊரடங்கு நேரத்தில் சில விடயங்களை பொதுமக்கள் செய்து கொள்ளலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளிய செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் கடமையாற்றுபவர்கள் தமது அடையாள அட்டைகளை முன்வைத்து கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.