
உக்ரைன், ஏப் 2
ஒரு மாதப் பேரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அந்நாட்டு அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீது 38வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறி வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா படைகள், குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு மாதப் போரில் உக்ரைனுக்கு சுமார் 10 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சரவையின் பொருளாதார குழுவுடனான சந்திப்பில் இந்த மதிப்பீடு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.