அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

அரச பேருந்து மீது இனந்தெரியாதோர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து மீது கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பேருந்தின் பின் பகுதி கண்ணாடி முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன், சிலருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *