
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்நு மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(3) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பு அருகே குறித்த இந்திய மீனவர்கள் ஒரு படகில் இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அங்கிருத 12 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.