<!–
சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் .
மேலும் சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றதோடு வி.பி. என் கிடைப்பது தற்போது நான் பயன்படுத்துவதுபோல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது என்றும் தெரிவித்தார் .
இதேவேளை அதிகாரிகள் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும் , என்பதோடு முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.