கொழும்பு,ஏப் 3
சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றதோடு, வி.பி.என். கிடைப்பது, தற்போது நான் பயன்படுத்துவது போல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கி விடுகின்றது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை அதிகாரிகள் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும் என்பதோடு, முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
