இனிவரும் நாட்களில் மின்வெட்டு குறைவடையும்

கொழும்பு, ஏப் 3

நாட்டில் இனிவரும் நாட்களில் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுகள் இணங்கியுள்ளதாக  பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நாட்டில் இன்றைய தினம் ஒரு மணிநேரமும் 40 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *